இந்தூரில் உள்ள மிகப்பெரிய பூங்காவாக மேக்தூத் உப்வான் உள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரிடமும் மிகவும் புகழ் பெற்றுள்ள பூங்காவாக இது உள்ளது.
இந்த பூங்காவில் வாரம் முழுவதும் கூட்டமாக இருந்தாலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகவும் நிரம்பி வழியும். தங்களுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இந்த இடத்தில் தங்களுடைய விடுமுறை நாட்களை கழித்திடுவதில் உள்ளூர் மக்களுக்கு அலாதியான பிரியமாகும்.
செழிப்பான புல்வெளிகள், சிறப்பான தோட்ட தளங்கள், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகள், சுழலும் நீரூற்றுகள் மற்றும் பல கண்கவரும் பார்வையிடங்களை இந்த பூங்கா கொண்டுள்ளது.
இந்தூரின் பொக்கிஷத்தில் உள்ள மிகச்சிறந்த அணிகலமான மேக்தூத் உப்வான் உள்ளது. மேலும், இந்த பூங்காவின் அமைதியான மற்றும் ஓய்வெடுக்கத் தகுந்த சூழலின் காரணமாக பல்வேறு குடும்பங்கள் இங்கு இன்ப சுற்றுலாவிற்கு வந்து, தங்களுடைய பரபரப்பான வாழ்க்கை நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கின்றனர்.
மேலும், மேக்தூத் உப்வான் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அதற்கு அருகேயுள்ள பொழுதுபோக்கு பூங்காவான மங்கல் மெர்ரி லாண்ட்-ற்கும் குடும்பத்துடன் சென்று வரலாம்.