இந்தூரின் கட்டிடக்கலை அதிசயங்களில் மற்றுமொரு ஆபரணமாக சுக் நிவாஸ் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையை ஹோல்கார் அரசர்கள் தங்களுடைய கோடை வாழிடமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்திய மற்றும் மேற்கத்திய பாணியிலான கட்டிடக்கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் அற்புதமான கட்டிடமாக இது விளங்குகிறது. இந்த அரண்மனை ஹோல்கார் அரசர்களின் இரசனை மற்றும் சுகபோக வாழ்க்கையை தெளிவுபடுத்துவதாக உள்ளது.
இந்த அரண்மனையின் கவர்ச்சியான அம்சமாக பழைய அரண்மனை மற்றும் சுக் நிவாஸ் அரண்மனை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இதன் தரைக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதை உள்ளது.
மேலும், பசுமை போர்த்தியுள்ள தோட்டங்களாலும் சுக் நிவாஸ் அரண்மனையின் அழகு அதிகரித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அரண்மனை, இன்றைய காலகட்டத்தில் இன்ப சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.
இந்தூரை ஆண்ட அரசர்களின் பெருமை மிகு வாழ்க்கையின் அடையாளமாக உள்ள இந்த அரண்மனைக்கு இன்றும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவு எண்ணிக்கையில் வந்து செல்கின்றார்கள்.