திரிபுர சுந்தரி கோயில், மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் நகரத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில், பேடகாட் சாலையில், தேவார் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஜபல்பூரின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றான இக்கோயில், புனிதமானதாகவும், நகரின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் கருதப்படுகிறது.
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள திருவுருவச்சிலை மண்ணில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. திரிபுரா என்றால் “மூன்று நகரங்கள்” என்றும் சுந்தரி என்றால் “அழகிய பெண்” என்றும் அர்த்தமாகிறது.
இதன் படி பார்த்தால், இக்கோயிலின் பெயரின் அர்த்தம் “மூன்று நகரங்களின் அழகிய பெண் தெய்வம்” என்று பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஷக்திஸம் என்ற போதனை நூலின் படி, உண்மையில் இப்பெயர் முப்பெருந்தேவியரையும், அவர்தம் வீரதீரங்களையும் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலுக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். முக்கியமாக, துர்கா பூஜா என்றும் அழைக்கப்படும் தசரா திருவிழாவின் போது இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.
திரிபுர சுந்தரி கோயிலை, புனிதத் துறவிகள் மற்றும் மத குருமார்கள், வார்த்தைகளால் விவரிக்க முடியாத வசீகரம் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.