பஸ்தர் அரண்மனை எனும் இந்த வரலாற்றுச்சின்னம் ஜக்தல்பூர் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய சிறப்பம்சங்களில் ஒன்று. இது பஸ்தார் ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
பர்சூர் எனும் நகரத்திலிருந்து இந்த ஜக்தல்பூருக்கு தலைநகரம் மாற்றப்பட்டபோது அம்மன்னர்களால் இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த அரண்மனையில் பஸ்தர் ராஜவம்ச வாரிசுகள் வசித்து வருகின்றனர்.