ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் இந்த கொடும்சர் குகைகள் அமைந்துள்ளன. இந்த அதிசய பாறைக்குகை அமைப்புகள் இந்தியாவிலேயே முதன்மையானவையாகவும் உலகிலேயே இரண்டாவது நீளமான பாறைக்குகை அமைப்பாகவும் புகழ் பெற்றுள்ளன.
இந்த குகைகள் யாவுமே பாதாளத்தில் அமைந்திருப்பதால் உள்ளே வெளிச்சமே கிடையாது என்பதை பயணிகள் மனதில் கொள்வது நல்லது. ஸ்டாலக்சைட்டுகள் மற்றும் ஸ்டாலக்மைட்டுகள் எனப்படும் மினுமினு பாறைப்படிம அமைப்புகளால் இந்த குகைகள் உருவாகியுள்ளன.
குறுகலான பாறை இடுக்குகள், படி அமைப்புகள் வழியாக இந்த குகைகளின் உள்ளே செல்லவேண்டியது. பிரதான குகை அமைப்பின் உள்ளே வித்தியாசமான எதிரொலி அம்சங்களையும் காண(கேட்க) முடிகிறது.
அமெரிக்காவின் காணப்படும் ‘கிராண்ட் கேன்யன்’ பாறைகள் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த கொடும்சர் குகை அமைப்புகள் இந்திய சுற்றுலா ஆர்வலர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.
இந்த குகைகள் பற்றிய பல்வேறு நாட்டுப்புற கதைகள் பழங்குடி மக்கள் மத்தியில் சொல்லப்பட்டு வருகின்றன. குபன்பால் குகைகள் என்ற பெயரிலும் இந்த கொடும்சர் குகைகள் அழைக்கப்படுகின்றன.