ஆந்திரா அசோசியேஷன் எனும் சங்கத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்ட ஒருமித்த முயற்சியில் இந்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்வாமி கோயில் உருவாகியுள்ளது. ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் பாலாஜி பக்தர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பதி வரை செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோயிலில் சிரமமின்றி வெங்கடாசலபதியை தரிசனம் செய்து மகிழலாம். ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் இந்த ஷீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு விஜயம் செய்து உலகைக்காக்கும் கடவுளை வணங்கி மனச்சாந்தி பெறுகின்றன