ஜெயின்டிய மொழியில் சிண்டு க்ஸியர் என்றால் 'தங்க மலர்' என்று பொருளாகும். இந்த இடத்தில் தான் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் கியாங் நோங்பா பிரிட்டிஷாருக்கு எதிரான தன்னுடைய சுதந்திரப் போராட்டத்தை தொடங்கினார். இது மிண்டு நதியின் கரையில் அமைந்துள்ள இடமாகும்.
இன்றைய நாட்களில், சிண்டு க்ஸியர் உள்ளூர்வாசிகளிடம் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்த நதியில் சிறுவர்களும், பெரியவர்களும் எல்லா வேளைகளிலும் மீன் பிடித்துக் கொண்டிருப்பதையும், நீச்சலடிப்பதையும் நாம் காண முடியும். மேலும் இந்த நதியின் குறுக்காக ஒரு அழகிய கயிற்றாலான தொங்கு பாலம் ஒன்றும், ஒரு நீர் சேகரிப்பு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜோவாய்-க்கு அருகில் உள்ள இடங்களில் ஒன்றான இதற்கு சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய குடும்பத்துடன் வந்திருந்து, மென்மையான சூரியன் மற்றும் குளிர்ச்சியான காற்றை அனுபவித்து செல்கின்றனர்.
இந்த இடத்தில் இருக்கும் சில துரித உணவகங்களில், கிடைக்கும் சுவை மிக்க உள்ளூர் பதார்த்தங்களையும் சுற்றுலாப் பயணிகள் சுவைத்திட முடியும். ஷில்லாங்கில் இருந்து சுற்றுலா வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து சிண்டு க்ஸியர் வருவது நல்ல வழிமுறையாகும்.