யூ மார் பாலிங்கி மற்றும் யூ லூ லிங்ஸ்கோர் லாமரே ஆகிய இருவரும் ஜெயின்டியா அரசரின் ஆணைப்படி துளுமுவி கற்பாலத்தைக் கட்டினார்கள். ஜெயின்டியா அரசர் தன்னுடைய கோடைக்காலத் தலைநகரத்தை சுட்ங்காவில் இருந்து நார்டியாங்கிற்கு மாற்றியதிலிருந்து இந்த கதை துவங்குகிறது.
அப்போது, அவருடைய முதன்மை தலைநகரான ஜெயின்டியாபூரில் இருந்து செய்திகளை தெரிந்து கொள்ளவும், நல்ல தொடர்பில் இருக்கவும் விரும்பிய ஜெயின்டியா அரசர் தன்னுடைய தளபதிகளான யூ மார் பாலிங்கி மற்றும் யூ லூ லிங்ஸ்கோர் லாமரே ஆகியோரிடம் இந்த இரு இடங்களையும் இணைக்கும் வகையில் ஒரு பாலத்தை கட்ட ஆணையிட்டார்.
இந்த மாபெரும் கற்பாலம் துளுமுவி ஓடையின் மேல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தில் மிகப்பெரிய கற்பலகைகள், ஆங்காங்கே அதற்கேற்ற வகையில் பெரிய பெரிய கற்களால் தாங்கி பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 7 நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஒரு யானை வியாபாரி தன்னுடைய யானைகளை இந்த கற்பாலத்தின் மீது ஏற்றி சென்ற போது அதில் இருந்த ஒரு கற்பலகை உடைந்தது. எனினும், இந்த பாலம் இன்னமும் உறுதியாகவும், உயரமாகவும் நின்று கொண்டுள்ளது.
துளுமுவி ஓடைக்கு அருகில் இருக்கும் முவி நீர்வீழ்ச்சி அற்புதமான சுற்று வட்டக் காட்சிகளை உருவாக்கும் அழகிய சுற்றுப் புறத்தைக் கொண்டிருக்கிறது.