கய்த்தோர் எனப்படும் இந்த ஸ்தலம் ஜெய்ப்பூர்-ஆம்பேர் சாலையில் மான் சாகர் ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது. இது ஜெய்ப்பூர் மன்னர்களின் சமாதி ஸ்தலமாகும். இங்கு ஜெய்பூர் மன்னர்களின் சாத்ரி எனப்படும் சமாதி மாடங்களும் நினைவுச் சின்னங்களும் அமைந்துள்ளன. இவை பளிங்குக்கற்கள் மற்றும் மணற்பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன.