ஏழு அழகிய அடுக்குகளைக்கொண்டுள்ள இந்த ஜெயின் மந்திர் தன் தோற்றத்தில் மௌண்ட் அபுவிலுள்ள தில்வாராவைப்போன்றே காட்சியளிக்கின்றது. இந்த மந்திர் 10 நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆதிநாத பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள விக்கிரகம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், பர்ஷ்வநாதர் சிலை மற்றும் அழகான பூ வேலைப்பாடுகளோடு கூடிய மிருகச்சித்திரங்கள் போன்றவையும் இக்கோயிலில் காணப்படுகின்றன.