ஜல் மஹால் எனும் இந்த அழகிய அரண்மனை ஜெய்ப்பூரில் ஒரு சிறிய ஏரியின் நடுவே அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் மன்னர்கள் மற்றும் ராஜகுடும்பத்தினர் வேட்டைக்கு செல்லும்போது தங்கும் வசிப்பிடமாக இந்த அரண்மனை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏரிக்கரையிலிருந்து இந்த அரண்மனையை பார்த்து மகிழலாம்.