லக்ஷ்மி நாராயன் கோயில் அல்லது பிர்லா கோயில் என்றழைக்கப்படும் இந்தக்கோயில் மோதி தூங்க்ரி அல்லது முத்துமலை என்றழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இது ஹிந்துக்கடவுள் விஷ்ணு மற்றும் அவரது துணைவியார் லட்சுமி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பிர்லா பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையால் 1980ம் ஆண்டு இது கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள விஷ்ணு சிலை ஒரே பளிங்குக் கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது.