அமர் சாகர் ஏரியின் கரைப்பகுதியில் அமைந்துள்ள ராஜகம்பீரமான சின்னம் இந்த அமர்சிங் அரண்மனை ஆகும். இந்த ஏரியைச்சுற்றிலும் பாறையில் செதுக்கப்பட்ட பல மிருக உருவங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை ராஜகுடும்பத்தினரை பாதுகாக்கும் சக்திகளாக நம்பப்பட்டிருக்கிறது. இந்த புராதான அரண்மனை வளாகம் ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 7கி.மீ தூரத்தில் உள்ளது. 17ம் நூற்றாண்டில் மகரவால் அகாய் சிங் எனும் மன்னரால் இது கட்டப்பட்டுள்ளது.
ஐந்தடுக்குகளைக் கொண்டுள்ள இந்த அரண்மனையில் அற்புதமான சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளதை பயணிகள் காணலாம். இந்த வளாகத்தில் பல தடாகங்கள், சுவர்கள் மற்றும் ஒரு சிவன் கோயில் போன்றவை உள்ளன.