ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 42 கி.மீ தொலைவில் இருக்கும் கூரி கிராமத்தில் இந்த கூரி மணற்குன்றுகள் அமைந்துள்ளன. சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள பாலைவனப்பகுதியில் மணற்குன்றுகளுக்கருகே ஒட்டகச்சவாரி செல்லலாம்.
இதற்காகவென்றே ஒட்டகங்கள் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கின்றன. இப்பகுதியில் உள்ள வீடுகள் மண் சுவர்கள் மற்றும் வைக்கோல் கூரையுடன் அச்சூழலுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் காட்சி அளிக்கின்றன.
மாலை நேரத்தில் சொக்கப்பனை வெளிச்சத்தில் நாட்டுப்புற இசை மற்றும் சிருங்கார அம்சம் பொதிந்த கல்பெலியா நடனம் மற்றும் போன்றவை ஜெய்சல்மேர் சுற்றுலாவை மறக்க முடியா அனுபவமாய் மாற்றுகின்றன. ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகள் கூரி கிராமத்துக்கு விஜயம் செய்யலாம்.