ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 25கி.மீ தூரத்தில் குல்தாரா எனும் புகழ்பெற்ற வரலாற்றுப்பின்னணி கொண்ட கிராமம் உள்ளது. பயமுறுத்தும் சூழலைக்கொண்ட இக்கிராமத்தில் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இங்கு 200 வருடங்களுக்கு முந்தைய மண் வீடுகளைப்பார்க்கலாம். வரலாற்றுக்குறிப்புகளின்படி இந்த கிராமம் பாலிவால் பிராம்மணர்கள் என்ற இனத்தார் 500 வருடங்கள் வசித்த இடமாக இருந்துள்ளது.
அவர்கள் குரூர ஆட்சியளார்களின் கொடுமை காரணமாக இந்த இடம் விட்டு அகன்றிருக்கின்றனர். ஆகவே இந்த இடமானது பாலிவால் பிராம்மணர் இனத்தாரால் சபிக்கப்பட்ட பூமியாக மக்கள் நம்புகின்றனர்.