ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் கக் ஆற்றின் கரையில் இந்த ராம் குண்டா அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தின் முக்கிய சிறப்பம்சம் மஹாராஜா அமர் சிங்கின் ராணி மன்சுகி தேவியால் கட்டப்பட்டுள்ள ஒரு கோயிலாகும்.
இந்த கோயில் ராமபிரானுக்காக கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு கணேஷ், மஹிஷாசுரா மற்றும் பைரவர் சிலைகளையும் பக்தர்கள் பார்க்கலாம். இந்த கோயிலின் சுவர்களில் கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
கோயிலுக்கு வெளியில் 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த கோவர்த்தன தூண் ஒன்றும் உள்ளது. ராம் குண்டா பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் ஒட்டகச்சவாரியிலும் ஈடுபடலாம்.