ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் 1981ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நாள் ஷாஹித் பகத் சிங் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜலந்தரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த மியூசியம் அமைந்துள்ளது. இது கட்கர் கலியான் எனும் மற்றொரு சுதந்திரப்போராட்ட தியாகி பிறந்த இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திரப்புரட்சியில் ஈடுபட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
பாதி எரிந்த நிலையில் எலும்புகள் மற்றும் ரத்தம் தோய்ந்த செய்தித்தாள்கள் போன்றவை இங்கு வரலாற்று சான்றுகளாக காட்சி தருகின்றன. ஷாஹீத் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பை எழுதுவதற்கு பயன்படுத்திய பேனாவும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது.