சோடல் மந்திர் எனும் இந்த கோயில் பாபா சோடன் என்பவருக்காக கட்டப்பட்டிருக்கிறது. இந்த பாபாவை பற்றி சொல்லப்படும் ஒரு கதையின்படி, தனது தாயுடன் அருகிலிருந்த குளத்திற்கு இந்த பாபா சென்றுள்ளார்.
அவர் சிறிய மண் உருண்டைகளை தன் தாய் மீது விட்டெறிந்து விளையாடியுள்ளார். இதனால் சற்றும் எரிச்சலடைந்த அவரது தாய் கோபத்தில் தன்னை மறந்து அவரை சபித்தும் விட்டார்.
பின்னர் திரும்பவும் அவரை சபிக்க தூண்டிய பாபா அதன்படியே குளத்தில் விழுந்து பின் திரும்பவேயில்லை. ஒரு பாம்பு வடிவத்தில் குளத்திலிருந்து வெளிப்பட்ட பாபாஜி பின் இவ்வுலகைவிட்டு மறைந்ததாக கூறப்படுகிறது.
சதா மற்றும் ஆனந்த் இன மக்களிடம் தன்னை வழிபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த கோயில் ஸ்தலத்தில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் சோடல் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.