ரன்பிரேஷ்வர் கோவில், இந்துக்களின் அழிக்கும் கடவுள், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரபலமான புனித யாத்திரை தலமாகும். இந்த பண்டைய கோயில் 1883 ல் மகாராஜா ரன்பீர் சிங் என்பவரால் கட்டப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள இரண்டு அரங்குகளில் சிவனின் புதல்வர்களான கார்த்திகேயர் மற்றும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவிலில் ஒவ்வொன்றும் 15 செ. மீ அளவுள்ள 12 படிக ‘சிவலிங்கங்கள்’ உள்ளன.
தவிர 7.5 அடி உயரமுள்ள் ஒரு சிவலிங்கமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கற்பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள சிவலிங்கங்களையும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காணமுடியும்.