ஒரு அழகிய கோயிலாக மட்டுமல்லாமல் வேறு சில சிறப்பம்சங்களையும் இந்த பால ஹனுமான் கோயில் கொண்டிருக்கிறது. 1964ம் ஆண்டிலிருந்து இடைவிடாமல் ‘ஷீ ராம் ஜய் ராம் ஜய் ஜய் ராம்’ எனும் உச்சாடனம் இந்த கோயிலில் பக்தர்களால் 48 வருடங்களாக கோஷிக்கப்பட்டு வருகிறது.
மிக நீண்ட காலமாக தொடரும் மந்திர கோஷம் என்ற அடிப்படையில் இந்த அதிய சடங்கு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
ராம் துன் உச்சாடனம் எனும் இந்த தொடர் சடங்கில் விருப்பமுள்ள பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஜாம்நகரிலுள்ள ரண்மல் ஏரியின் தென்கிழக்கு பகுதியில் இந்த கோயில் வளாகம் அமைந்துள்ளது.