பழைய ஜாம்நகர் பகுதியின் மையத்தில் இந்த உயரமான ரத்தன் பாய் மஸ்ஜித் எனும் மசூதி கம்பீரமாக வீற்றிருக்கிறது. முத்துக்கள் பதிக்கப்பட்ட சந்தன மரக்கதவுகள் மற்றும் மற்றும் இரண்டு மினாரெட் கோபுரங்கள் போன்றவற்றை இந்த மசூதி கொண்டுள்ளது.
மழை நீர் சேகரிப்பிற்கான பிரத்யேக அமைப்பு மற்றும் தொழுகைக்கு முந்தைய உடல் சுத்திக்கான குளம் ஆகியவையும் இந்த மசூதி வளாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.