பீகாரில் புகழ் பெற்ற மாவட்டங்களில் ஒன்றான ஜமுய், ஜெயின் மதத்தின் புராணவியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. பிஜாரில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த மாவட்டம் தான் மகாபாரத காலத்தில் இருந்தே வெளிச்சத்தில் உள்ளது.
ஜமுய் சுற்றுலாவிற்கு கண்டிப்பாக வருகை தர மற்றொரு காரணமும் உள்ளது; "ஜ்ரிபிக்ரம்" அல்லது "ஜம்பியாக்ரம்" என்ற கிராமத்தின் பெயராலேயே ஜமுய் அதன் பெயரை பெற்றது. இந்த கிராமத்தில் தான் மகாவீரர் தெய்வீக அறிவை (கேவலாய்க்யான்) அடைந்ததாக நம்பப்படுகிறது.
இலக்கியம் மற்றும் இசை துறை வளர்ச்சியில் ஜமுய் வளமையான பூமியாக விளங்கி வருகிறது. இந்த துறைகளில் புகழ் பெற்ற பல அறிவு ஜீவிகள் ஜமுயில் இருந்து வந்தர்வர்கள் தான்.
ஜமுய் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
வரலாற்று முக்கியத்துவம் மற்றும் புராண முக்கியத்துவம் உள்ள பல சுற்றுலா இடங்களை கொண்டுள்ளது ஜமுய் சுற்றுலா. ஜெயின் மந்திர், ஷத்ரிய குந்த் கிராம், கித்தேஷ்வர் கோவில், பட்னேஷ்வர் மந்திர், காளி மந்திர், ஹஸ்ரத் கான் கஜி தர்காஹ், சிமுல்டல்லா மழை வாழிடம், குமார் கிராம், சுக்கி, நாகி டம் வனவிலங்கு சரணலாயம் மற்றும் சில இடங்களும் இங்கு அதிகமாக பேசப்படும் இடங்கள்.
ஜமுய் நகரத்தை அடைவது எப்படி?
ஜமுய் நகரத்தை இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். விமானம் மூலமாக வர விரும்புபவர்கள் கயா மற்றும் பாட்னா விமான நிலையங்கள் வழியாக இங்கு வரலாம்.
ஜமுய் நகருக்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த நேரம்
குளிர் காலம் தொடங்கும் முன், அதாவது ஜூலை முதல் நவம்பர் மாதத்திற்குள் இங்கு வருவதே உகந்த நேரமாகும்.
ஜமுய் நகரத்தை அடைவது எப்படி?
ஜமுய் நகரத்தில் இருந்து நாட்டின் மற்ற இடங்களுக்கு இரயில், சாலை மற்றும் விமானம் மூலமாக சுலபமாக செல்லலாம்.