கித்தேஷ்வர் கோவிலை உள்ளூர்வாசிகள் சிவன் கோவில் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவில் ஜமுய்க்கு தெற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகிய சிவன் கோவிலான இது பாறைகளின் மீது உள்ளது.
புராண கதைகளின் படி, ராவணனுக்கும் ஜதாயூவிற்கும் நடந்த மறக்க முடியாத போர் இந்த இடத்தில் தான் நடந்தது என்று நம்பப்படுகிறது. சிவராத்திரி மற்றும் பூர்ணிமா மகத்தின் போது இங்கு பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.