ஜெயின் புனிதப் பயணர்களின் மிகப் பெரிய ஓய்வு விடுதியாக உள்ளதால் ஜெயின் மந்திர் தர்மசாலா புகழ்பெற்று விளங்குகிறது. ஜமுய் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஷத்ரிய கிராம் குந்திற்கு செல்லும் வழியில் இந்த மந்திர் இருப்பதால் இதையும் கண்டிப்பாக சுற்றிப் பார்க்கலாம்.
இந்த ஓய்வு விடுதிக்கு உள்ளே மகாவீரரின் கோவில் ஒன்று பெரிதாக உள்ளது. இது ஜமுய் மாவட்டத்திற்கு மேற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள சிக்கந்த்ரா ப்ளாக்கில் அமைந்திருக்கிறது. பிரம்மாண்டத்திற்காகவும் அமைதிக்காகவும் இந்த ஜெயின் மந்திர் தர்மசாலா நம் நாட்டில் புகழ் பெற்று விளங்குகிறது.