பாதல்கோலே அப்யாரண் எனும் இந்த காட்டுயிர் சரணாலயம் ராய்பூரிலிருந்து 160 கி.மீ தூரத்தில் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ளது.. ஈப் மற்றும் டோர்கி எனும் ஆறுகளின் கரைப்பகுதியில் இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது.
தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளம் போன்றவற்றை வாய்க்கப்பெற்றிருக்கும் இந்த சரணாலயம் முழுக்க சால் மரங்கள் நிரம்பியுள்ளன. சிறுத்தை, குரங்கு, கரடி, ஓநாய், கழுதைப்புலி, புலி, காட்டுப்புலி, குள்ள நரி போன்ற விலங்குகள் இங்கு வசிக்கின்றன. புலம்பெயர் பறவைகளையும் இங்கு அதிகமாக பார்க்கலாம்.
இனிமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் இந்த சரணாலயம் ஒரு நல்ல கோடைவாசஸ்தலமாகவும் பயணிகளால் விரும்பப்படுகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையுள்ள பருவம் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.