துதுமா நீர்வீழ்ச்சி அல்லது மத்ஸ்ய தீர்த்தம் என்றழைக்கப்படும் இந்த சுற்றுலா அம்சம் ஜெய்பூர் நகரத்துக்கு அருகில் உள்ளது. நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த துதுமா நீர்வீழ்ச்சி மச்சகுண்ட் ஆற்றுப்பிரவாகத்தில் உருவாகிறது.
தென்னிந்தியாவிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எனும் பெருமையையும் இது கொண்டுள்ளது. 157 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி வீழ்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியில் மச்சகுண்ட் நீர்மின்னுற்பத்தி திட்டமும் இயங்கி வருகிறது. 1941ம் ஆண்டு வரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த இந்த இடம் பின்னர் மச்சகுண்ட் நீர்மின்னுற்பத்தி திட்டத்திற்காகவே செப்பனிடப்பட்டது.
சைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த ஸ்தலம் என்பதால் இந்த மச்சகுண்ட் ஒரு ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இந்த நீர்வீழ்ச்சி இரண்டு அங்கங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது. இதன் ஒருபகுதி ஒடிஷாவிலும் மற்றொரு பகுதி ஆந்திர மாநிலப்பகுதியிலும் வீழ்வதால் இது இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையாகவும் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமான அழகுடன் காட்சியளிக்கிறது.