ஜெய்பூர் பார்க் என்றழைக்கப்படும் இந்த பூங்கா ஒரு அழகிய ஏரியின் அருகே நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. இந்த ஏரி ஜகந்நாத் சாகர் என்று அழைக்கப்படுகிறது. ஜெய்பூர் நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த பூங்காவில் நுழைவுக்கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்த ஏரியில் பயணிகள் உல்லாசப்படகு சவாரி போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். அதுமட்டுமல்லாமல் இந்த பூங்காவில் இயக்கப்படும் விளையாட்டு ரயிலில் குழந்தைகள் பிரயாணித்து மகிழலாம். குறிப்பாக இந்த இரண்டு அம்சங்களும் சுற்றுலாப்பயணிகளை ஜெய்பூர் பூங்காவிற்கு ஈர்க்கின்றன.
மேலும், சிறு குழந்தைகள் விரும்பக்கூடிய பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்பும் உள்ளூர் மக்களும் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதுபோக்குவதற்கு இந்த பூங்கா மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. பூங்காவைச்சுற்றி பல்வேறு சிற்றுண்டி கடைகளும் அமைந்துள்ளன.