மாலிகுரா எனும் இந்த கிராமம் ‘மாலி’ என்றழைக்கப்படும் பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமமாகும். இது ஜெய்பூர் நகரத்திலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள இதர பழங்குடி மக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை இந்த மாலை பழங்குடியினர் கொண்டுள்ளனர். கலையம்சம் நிரம்பிய கைவினைப்பொருள் தயாரிப்புகளுக்கு இவர்கள் பிரசித்தமாக அறியப்படுகின்றனர்.
இந்த கிராமத்துக்கு அருகிலுள்ள குண்டுலி எனும் கிராமத்தில் வாராந்திரமாக பழங்குடி மக்களின் சந்தை ஒன்று நடத்தப்படுகிறது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய பழங்குடி இன சந்தையாக புகழ் பெற்றுள்ளது.
வித்தியாசமான கைவினைப்பொருட்களை இந்த சந்தையில் வாங்கலாம். மேலும், இந்த மாலிகுரா கிராமப்பகுதியில்தான் மலையை குடைந்து உருவாக்கப்பட்ட அகல ரயில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.
இப்பகுதியின் குடிசைத்தொழில் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக இங்கு ஒரு மூங்கில் பாய் முடைவு தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த கிராமத்திலிருந்து 2 மைல் தொலைவில் ‘கெண்டுபோடா’ எனும் மற்றொரு சிறு கிராமம் உள்ளது.
இங்கு பிருகோம்ப் எனும் காட்டு தெய்வத்துக்கான கோயில் அமைந்துள்ளது. மனிதர்களை காக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி இந்த தெய்வத்துக்கு உள்ளதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.