சுனபேதா என்றழைக்கப்படும் இந்த இடத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்திருக்கிறது. செழிப்பான பள்ளத்தாக்கு பகுதிகளை கொண்டுள்ள சுனபேதா ஜெய்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது.
இங்குள்ள வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, குரைக்கும் மான், கழுதைப்புலி, கரடி, கௌர் எருமை, சம்பார் மான், சிதன் மான், காட்டு மயில், மலை மைனா, கௌதாரி மற்றும் ஏராளமான ஊர்வன விலங்குகள் வசிக்கின்றன.
சுனபேதா புலிகள் பாதுகாப்புத்திட்டம் இங்குள்ள புலிகளை காப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. செங்குத்தான மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குப்பகுதிகளை இங்குள்ள காடுகள் கொண்டுள்ளன. மூன்று ஆறுகள் மற்றும் பதினோரு ஓடைகள் இந்த வனப்பகுதியின் வழியே பாய்கின்றன.
ஒரு புராதனமான ஜகந்நாதர் கோயில் சுனபேதா பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு நடத்தப்படும் வருடாந்திர தேர்த்திருவிழா இப்பகுதியில் வெகு பிரசித்தமாக உள்ளது. இந்த கோயில் வளாகத்தின் உள்ளே சிவன், கணேஷ் மற்றும் லட்சுமி ஆகிய தெய்வங்களுக்கான சிறு சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு சிவன் கோயில் ஒன்று, இங்குள்ள ஒரு மலையுச்சியில் அமைந்துள்ளது. இந்த மலையடிவாரத்தில் பார்வதி கோயிலும் வீற்றிருக்கிறது.