ஜாலாவார் கோட்டைக்கு அருகிலேயே இந்த பவானி நாட்டியஷாலா அமைந்துள்ளது. 1921ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கலையரங்கம் பல உன்னதமான கலைப்படைப்புகள் மற்றும் நாடகங்களை கண்டுள்ளது. தனித்தன்மையான ‘நிலத்தடி’ அரங்க அமைப்பினை இது கொண்டுள்ளது.
குதிரைகளும் சாரட்டுகளும் மேடையில் ஏறுவதற்கேற்ப இந்த அரங்கின் மேடையானது குறைந்த உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் இதுபோன்று 8அரங்குகள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது.
சாகுந்தலம் மற்றும் ஷேக்ஸ்பியர் போன்ற உன்னதமான நாடகங்கள் இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த பவானி நாட்டியஷாலா ஒரு பார்சி நாடகக்குழுவாகவும் செயல்பட்டுள்ளது. கலைத்துறையில் ஆர்வமுள்ள பயணிகள் இந்த பழமையான நாட்டியஷாலாவுக்கு மறக்காமல் விஜயம் செய்வது நல்லது.