சாப்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தல்ஹான்பூர் ஜாலாவார் நகரத்திலிருந்து 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில்களில் கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ள தூண்கள், சிருங்கார சிற்பங்கள் மற்றும் தோரண வேலைப்பாடுகள் ஆகியவை காணப்படுகின்றன.
தற்சமயம் இப்பிரதேசத்தில் ஒரு அணை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. சுற்றிலும் காணப்படும் பசுமையான தாவரச்செழிப்பு மற்றும் வனப்பகுதி இந்த ஸ்தலத்தின் அழகை மேலும் கூட்டுகிறது.