ஜாலாவார் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் இந்த மனோஹர் தாணா கோட்டை அமைந்துள்ளது. ‘அழகான காவற்கோட்டை’ என்பதே இந்த பெயரின் பொருள். பர்வண் மற்றும் காளிக்காட் ஆறுகள் ஒன்று சேருமிடத்தை நோக்கியவாறு இந்த கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு அடுக்குகளைக்கொண்ட இதன் வடிவமைப்பில் காவல் கொத்தளங்கள் முக்கிய அம்சமாக காணப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் புவியியல் அமைப்பு போன்ற காரணிகளை இந்த கோட்டை அடிப்படையாக கொண்டுள்ளது ஒரு வியக்கத்தக்க விஷயமாகும்.