ரிக் வேதப்படி, அஸ்வின் என்றழைக்கப்படும் இரட்டை தெய்வங்கள், இந்திரர், சோம தேவர் மற்றும் அக்னிக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கியமான கடவுள்களாவர். இவர்களுடைய பெருமைக்கு மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, அவர்கள் மிகவும் உறுதியாக உண்மையை பின்பற்றுவர்கள் மற்றும் தவறானவற்றை மிகவும் தீவிரமாக எதிர்ப்பவர்கள். இரண்டாவது, அவர்கள் எப்பொழுதுமே குதிரைகளின் மேல் இருப்பார்கள்.
மூன்று, அவர்கள் மிகச்சிறந்த மருத்துவர்கள். உண்மையில், இவர்கள் கடவுள்களின் மருத்துவர்களாவர். கடவுள்கள் பலவீனமாக இருப்பதாக நினைக்கும் போதெல்லாம் அஸ்வின்களிடம் சென்று மருத்துவ உதவிகளைப் பெறுவார்கள்.
மேலும், அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களின் தீராத நோய்களையும் தீர்த்து வைத்து அருள் புரிபவர்களாகவும் உள்ளனர்.
ஜின்ட்-ல் அஸ்வினி குமரர்களின் கோவில் ஒன்று உள்ளது. இது நகரத்திலிருநது 14 கிமீ தொலைவில், கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்த இடம் மகாபாரதம், படம் புராணம், நாரடியா புராணம் மற்றும் வாமன புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனித நூல்களின் படி, அஸ்வினி குமாரர்களின் இடத்தில் நீராடி செல்லும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி, அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழிகள் திறக்கும்.
இந்த இடத்தில் உள்ள தண்ணீருக்கு நோய்களைத் தீர்க்கும் சக்தி உள்ளது. இந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு அழகிய கடவுள்களின் வழிபாட்டுத்தலத்தில் பக்தர்கள் மனமுருகி வேண்டிக்கொள்வார்கள்.