இந்து மற்றும் பௌத்த மத கருத்துகளின் படி சரஸ்வதி தேவியின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைக்கு, இந்த பகுதியில் 'ஹம்சா' என்ற பெயர் தரப்பட்டுள்ளது. இந்த பறவை எங்கும் நிற்காமல் சுமார் 7000 மைல்கள் வரை, உயரமாக பறக்கும் தன்மையுடையதால் கடவுள் இந்த பறவையை தனது வாகனமாக தேர்ந்தெடுத்துள்ளார்.
திபெத்தின் மானசரோவர் ஏரியில் வசித்து வரும் நீள கழுத்துடைய அன்னப்பறகைள், குளிர்காலங்களில் இந்தியாவில் உள்ள வசிப்பிடங்களுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து வருகின்றன.
அன்னப்பறவைகள் முத்துக்களை மட்டுமே சாப்பிடும் என்றும், பால் மற்றும் தண்ணீரை கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக உறிஞ்சிக் குடிக்கும் தன்மை உடையவை என்றும் உபநிஷதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இது பிரம்மாவின் புனிதமான அறிவைப் பெற்ற பறவைகளாகவும் இவை உள்ளன.
புனித நகரமான ஜின்ட் புராணங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜின்ட்-ல் இருந்து 5 மைல் தொலைவில், ஏகஹம்சா கோவில் இக்காஸ் கிராமத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு ஜின்ட்-ஹன்சி சாலையில் உள்ளது.
மேலும் கிருஷ்ண பகவானுடன் தொடர்புடைய இதிகாசங்களிலும் இந்த வழிபாட்டுத் தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடவுள் எப்படி தனது அன்பைப் பொழிகிறார் என்பதை விளக்கும் ஓவியங்களும் உள்ளன.