வடக்கு சண்டிகாரில் உள்ள ஹத்னார் பகுதி ஆட்சியாளரின் மகன்களில் ஒருவரை இமாச்சல பிரதேசத்தின் காங்ரா பகுதி அரசரின் மகள் மணந்து கொண்டதை நினைவுபடுத்தும் பொருட்டாக சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயந்தி தேவி கோவில் கட்டப்பட்டது. இந்த இளவரசி, ஜெயந்தி தேவியின் தீவிர பக்தையாவார்.
அவர் தன்னுடைய திருமணத்திற்குப் பின்னர் ஜெயந்தி தேவியை வழிபட முடியாது போய்விடுமோ என்று வருத்தப்பட்டார். அதனை இந்த பெண்கடவுளிடம் பிரார்த்தனையின் மூலம் முறையிட்டார்.
அந்த நேரத்தில் அவர் ஏறிச் சென்ற தோலி என்ற பல்லக்கு அவர் இருந்த இடத்தை விட்டு நகர முடியாதபடி கனமாகி விட்டது. அதன் பின்னர், அந்த பல்லக்கின் உள்ளே ஒரு சாமி சிலை ஒன்று வைக்கப்பட்ட போது, இந்த பிரச்னை சரியானது.
எனவே, ஹத்னாரின் அரசர் சண்டிகரிலிருந்து 15 கிமீ தொலைவில் சிவாலிக் மலைத்தொடரில் உள்ள மலைக் குன்றுகளுக்கு இடையில் ஜெயந்தி தேவிக்கான கோவிலை கட்டினார்.
ஜெயந்தி மஜ்ரி கிராமம் மற்றும் ஜெயந்தி தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகியவையும் இந்த மலையின் அடிவாரத்தில் உள்ளது மற்றும் ஜெயந்தி தேவியின் பெயரில் ஓடிக் கொண்டிருக்கும், பருவகால ஓடையான ஜெயந்தி ராவ் ஓடையும் கூட நூறு படிகள் ஏறிச் சென்றால் பார்க்கும் வகையில் உள்ளது.