ஜின்ட் நகரத்திற்கு தெற்காக 20 கிமீ தூரத்தில் உள்ள போன்கெர் கேரி என்ற கிராமத்தில் புஷ்காரா வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஜமதக்னி முனிவர் மற்றும் ரேணுகாதேவியின் புதல்வாரன பரசுராமரால் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் பிரம்மாவின் வழியில் வந்த குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
மகா விஷ்ணுவின் 6-வது அவதாரமாக கருதப்படும் பரசுராமர் சாகாவரம் பெற்றவராக கருதப்படுகிறார். அவர் சிவபெருமானை நோக்கி மிகவும் தீவிரமாகவும் மற்றும் வெகுகாலத்திற்கும் தவம் புரிந்தவர் என்று கருதப்படுகிறார்.
அவருடைய பக்தியை மெச்சிய சிவபெருமான், பரசுராமருக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்தார் மற்றும் ஒரு கோடாரியையும் கொடுத்தார்.
பரசுராமருடைய தந்தையை சத்திரிய அரசரான கர்த்தவீரியர் கொன்ற போது, கடுங்கோபமுற்ற பரசுராமர் 21 முறை சத்திரியர்களை கொன்று பழி தீர்த்தார்.
மகாபாரதத்தில் வரும் கர்ணர் மற்றும் துரோணாச்சாரியாருக்கு இவர் தற்காப்புக் கலைகளை கற்றுத் தந்திருக்கிறார். இவரே சில பிராமண வம்சங்களை உருவாக்கியவரும் ஆவார்.
இவருடைய தலத்தில் பிரார்த்தனை செய்வதன் மூலம் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இவ்விடத்தில் நம் மூதாதையர்களின் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்வது புனிதமானதாக கருதப்படுகிறது.