ஜின்ட் மாவட்டத்தில் உள்ள சாபிடோன் தாலுகாவின் தலைமையிடமாக சாபிடோன் உள்ளது. ஜின்ட் நகரத்தில் இருந்து 35 கிமீ தூரத்தில் உள்ள இந்நகரம், மேற்கு யமுனை கால்வாயின் ஹன்சி பிரிவு பாயும் இடமாக உள்ளது.
இந்த இடத்திற்கு பானிபட்-ஜின்ட் இரயில்வே லைன் வழியாகவும் வரலாம். இந்த பகுதியில் உள்ள பிற நகரங்கள் மற்றும் கிராமங்களைப் போலவே, சாபிடோனுக்கும் வரலாற்றுக்கு முந்தைய கால தோற்றம் உள்ளது.
மகாபாரதத்தில் சர்ப்பதேவி அல்லது சர்பிடாதி என்ற பெயரில் சாபிடோன் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தட்சசீலத்தைச் சேர்ந்த நாகா இனத்தவருடன் நடந்த போரில் பரிக்ஷித்து மன்னர் கொல்லப்பட்டார் மற்றும் அவருடைய புதல்வர் ஜன்மேஜயா இதற்கு பழி தீர்க்கும் விதமாக நாகா இனத்தவரை வென்றார்.
சர்ப்ப சாஸ்திர இதிகாச பாரம்பரியப்படி இந்த இடத்தில் நாக காணிக்கையை ஜன்மஜயா புரிந்த சர்ப்பதேவி என்ற இடம் தான் இன்றைய சாபிடோன்.இந்நகரத்தில் நாகேஸ்வர மகாதேவர், நாகதம்னி தேவி மற்றும் நாகஷேத்ரா ஆகிய மூன்று வரலாற்றுக்கு முந்தைய தலங்கள் உள்ளன.
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பழங்காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட பாகங்களும் இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தி கண்டுபிடித்துள்ளனர். இந்த பகுதியை ஹரப்பா நாகரிகத்திற்கு முன்னர் இருந்த செம்புக்காலத்தில் விவசாயம் செய்யும் சமூகத்தினர் கைப்பற்றியதாக இந்த அகழ்வாய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.