Share This Story
 

ஜோக் நீர்வீழ்ச்சி - இயற்கையின் பெருமிதப் படைப்பு

கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற  இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

ஜோக் நீர்வீழ்ச்சி - புராதானமான இயற்கை படைப்பு
Image source: Wikipedia

ஜோக் நீர்வீழ்ச்சி  தங்கு தடையின்றி  பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும்  இங்கு வருவர்.

அதோடு அருவியை சுற்றிக் பச்சை பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும், செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மேருகேற்றக் கூடியவை. ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை பயணிகள் ரசிப்பதற்கு என்றே நிறைய அனுகூலமான பகுதிகள் இருக்கின்றன.

அதில் மிகவும் முக்கியமானது வேட்கின்ஸ் தளம். ஜோக் நீர்வீழ்ச்சியை சுற்றி இருக்கும் ஸ்வர்ண நதியும், ஷராவதி பள்ளத்தாக்கும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

Click here to type in tamil

அருகில் பயணம்

ஹொன்னேமரடு என்ற  இந்த விடுமுறை சுற்றுலாஸ்தலம் சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்காகவே காத்திருக்கும் ஒரு ஸ்தலமாகும். இந்த சிறிய கிராமம் ஹொன்னேமரடு நீர்த்தேக்கத்தின் அருகில் ஒரு மலைச்சரிவில் அமைந்துள்ளது. ஷிமோகா மாவட்டத்தில் பெங்களூரிலிருந்து 392
சரித்திர புகழ் வாய்ந்த பனவாசி நகரம் உத்தர கன்னடா மாவட்டத்தில், வரதா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலமாகும். மகாபாரத காலத்திலிருந்தே பனவாசி புகழ் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. வியாசர் எழுதிய மகாபாரதத்தில் பனவாசி நகரம், வனவாசகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்னர் 1552-ஆம் ஆண்டின்
பசுமையான காடுகளும், உயரமான நீர்வீழ்ச்சிகளும், தொன்மையான ஆலயங்களும் சேர்ந்து சிர்சி நகரத்தை உத்தர கன்னடா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறது. பெங்களூரிலிருந்து 425 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் சிர்சி அமைந்துள்ளது. சிர்சி அருகில் உள்ள
கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும் அறியப்பட்டுள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் கார்வார் நகரத்திலிருந்து 130 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது.