பதுலி புகுரி என்றும் அழைக்கப்படும் பதுலி புகாஹுரி ஜெயத்வாஜ் சின்ஹாவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். அஹோம் அரசின் தளபதியாக இருந்த பதுலி போர்புகான் என்பவரின் பெயராலேயே இந்த குளம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் இதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு மிகப்பெரும் நிலப்பகுதியை தோண்டியே இந்த குளம் அமைக்கப்பட்டுள்ளது. டியோக்கின் - டிரங்க் சாலைக்கு வெகு அருகிலேயே இந்த குளம் உள்ளது. ஜோர்கட் நகரத்தின் கிழக்கு எல்லையில் டியோக் அமைந்துள்ளது.
அஸ்ஸாமிய மொழியில் புகுரி என்றால் நீர்த்தேக்கம் அல்லது குளம் என்று பொருளாகும். அஸ்ஸாமில் மிகவும் சாதாரணமான பெயர்களாக இருக்கும் புகுரிகள் பல நூற்றாண்டுகளாகவே இங்குள்ளன.
கோடை மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமலிருக்கச் செய்யவே புகுரி என்ற நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டன.
ஜோர்கட் நகரத்துடன் பதுலி புகுரி நன்றாக இணைக்கப் பட்டுள்ளதால், டாக்ஸிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பேருந்துகளில் எளிதில் இந்த இடத்தை அடைந்திட முடியும்.