பூர்ணானந்தா பரகோகைனின் கல்லறை உள்ள இடம் தான் பூர்ணானந்தா பரகோகைன் மைய்தாம் ஆகும். இவர் தன்னுடைய அரசை மச்சார்கட்டில் ஏற்படுத்தியிருந்தார். இந்த இடம் ஜோர்கட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் சிப்சாகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இந்த கல்லறையை பூர்ணானந்தா பரகோகைனின் மகன் 1817-ம் ஆண்டு கட்டினார். இன்று ஜோர்கட்டின் வரலாற்றுத் தலங்களில் ஒன்றாக இருக்கும் இவ்விடத்திற்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்த நோய்வாய்ப்பட்ட அரசரின் பெருமைய உணர்த்தும் வகையில் அழகுற இந்த கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் இந்த வகை மைய்தாம்கள் என்ற கல்லறைகள் சாதாணமாகவே பல இடங்களில் தென்பட்டாலும், இந்த கல்லறைகள் அவற்றில் புதைக்கப்பட்டுள்ள மாமனிதர்களின் நினைவுகள் மற்றும் பெருமைகளை தாங்கியிருக்கும் நினைவுச் சின்னங்களாகவே உள்ளன.
நகரத்தின் மையத்திலிருந்து இந்த மைய்தாமிற்கு செல்வது மிகவும் எளிமையான விஷயம் தான்.