1911-ம் ஆண்டு தேயிலை உற்பத்தியை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யவும், அதன் மூலம் உற்பத்தி மற்றும் தரத்தை அதிகப்படுத்துவும் உருவாக்கப்பட்ட டோக்லாய் தேயிலை ஆராய்ச்சி மையம் உலகத்திலேயே மிகவும் பழமையான தேயிலை ஆரய்ச்சி மையமாகும்.கடந்த நூறு ஆண்டுகளில் இது உலகத்திலேயே சிறந்த தேயிலை ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும்.
இந்த ஆராய்ச்சி மையத்தின் கடின உழைப்பின் காரணமாகவே 1951-ல் 234 மில்லியன் கிலோவாக இருந்த தேயிலை உற்பத்தி, 1998-ம் ஆண்டில் 669 மில்லியன் கிலோவாக உயர்த்தப்பட்டது.
தற்போது டோக்லாய் ஆராய்ச்சி மையத்தில் தாவரவியல், கிராம பொருளாதாரம், மண் மற்றும் செடிகளின் பாதுகாப்பு, பொறியியல், உயிர் வேதியியல் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்கள், புள்ளியியல் மற்றும் விவசாய பொருளாதாரம், மற்றும் தேநீர் சுவைத்தல் என்று எட்டு விதமான துறைகள் உள்ளன.
கிளப் சாலையில் உள்ள டோக்லாய் தேயிலை ஆராய்ச்சி மையத்தை பொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களில் எளிதில் அடைய முடியும். உலகின் இந்த பகுதியில் தேயிலை பற்றிய ஆராய்ச்சிகள் எப்படி நடக்கின்றன என்பதை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.