பழம்பெரும் மரமான கல்பவிருக்ஷா, ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இந்தியாவின் மிகப் பழமையான மரங்களுள் ஒன்றான இதன் வயது சுமார் 1200 வருடங்கள் ஆகும்.
ஒரு புராணக் கதையின் படி, நன்கு அறியப்பட்ட இந்திய ஞானியான ஆதி குரு ஸ்ரீ ஷங்கராச்சார்யா இம்மரத்தின் கீழமர்ந்து தியானம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 21.5 மீட்டர் சுற்றளவு கொண்ட இப்பழம்பெரும் முசுக்கொட்டை மரத்தில் தற்போது பூக்கள் மட்டுமே பூக்கின்றன; ஆனால் கனிகள் காய்ப்பதில்லை.
இம்மரத்தின் அருகில் உள்ள, ஆதி குரு ஸ்ரீ ஷங்கராச்சார்யா வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் குகை, கட்டாயம் பார்க்க வேண்டிய ஓர் சுற்றுலாத் தலமாகும்.
இம்மரத்தை நம்பிக்கையோடு, உண்மையாக வழிபடுவோரின் அபிலாஷைகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உலவி வருவதால், உள்ளூர்வாசிகள் பலரும் இம்மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபடுவதைக் காணலாம்.