அசோகருடைய பிரகடனங்கள் என்பது அவருடைய ஆட்சிக் காலத்தில் பாறைகள் மீது செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும். இந்த பாறை கல்வெட்டுகள் அசோகருடைய பல பிரகடனங்களின் மத்தியில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கல்வெட்டுகள் குஜராத்தில் உள்ள செளராஷ்டிர தீபகற்பத்தை சேர்ந்த ஜூனாகத் பகுதியில் அமைந்துள்ளது. இது கிர்நார் மலை உச்சியின் மீது பொறிக்கப்பட்டுள்ளதால் இந்த அரசாணை அவ்வுளவு எளிதில் அணுக முடியாது.
இந்த கல்வெட்டுகள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான பிராமி வரிவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன.