தர்பார் ஹால் அருங்காட்சியகம் என்பது ஜூனாகத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. தற்போது அருங்காட்சியமாக செயல்படும் இந்த தர்பார் ஹால் முன்பு ஜூனாகத் நவாப்புகளின் தர்பாராக (நீதிமன்றமாக ) பயன்படுத்தப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளுக்கு அன்றைய ஜூனாகத் நவாப்களின் வாழ்க்கை முறையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.
அதைத்தவிர இங்கு வெள்ளி நாணயங்கள், சான்டிலியர்ஸ், மர இருக்கைகள் , சிம்மாசனம் மற்றும் நவாப்புகள் பயன்படுத்திய பல்லக்குகள் போன்றவை பல்வேறு பொருட்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தில் ஒரு பட கூடம் மற்றும் துணி மற்றும் ஆயுதக் கூடம் போன்றவைகளும் உள்ளன.