சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஸக்கர்பாக் பூங்கா1863 ம் ஆண்டு ஜூனாகத்தில் நிறுவப்பட்டது. இந்தப் பூங்கா சுத்தமான ஆசிய சிங்கம் போன்ற விலங்குகளுடன் சில அருகிவரும் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
பூங்காவில் இந்திய காட்டெருமை, மலபார் பெரிய அணில், சிறிய குரங்குகள் மற்றும் பச்சை வான் கோழி போன்றவைகள் ஒரு ஜோடி ஆசியசிங்கங்களுக்கு பதிலாக மைசூர் வனவிலங்கு பூங்காவில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இந்த பூங்கா புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் 6.30 மணி வரை திறந்திருக்கும். இந்த பூங்காவிற்கான நுழைவு கட்டணம் வெளிநாட்டவருக்கு ரூ 50 ஆகவும் இந்தியர்களுக்கு ரூ 10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.