ஜூனாகத்தின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இடங்களில் உபர்கோட்டும் ஒன்று. இது 2300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் கோட்டை ஆகும். இந்தக் கோட்டையில் சில இடங்களில் 20 மீ க்கும் அதிக உயரமுடைய சுவர்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள குகைகள் கி.பி 1 ம் மற்றும் 4 ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்தக் குகைகளில் அழகான நுழைவாயில்கள் மற்றும் தூண்கள், தண்ணீர் கோட்டைகள், சட்டசபை மண்டபம் மற்றும் தியானம் மண்டபம் போன்றவை உள்ளன.
இங்கு சுமார் 300 அடி ஆழம் உள்ள அகழி காணப்படுகிறது. அந்த அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டிருந்தன. எதாவது ஒரு எதிரி கோட்டைச் சுவர் ஏறி உள்ளே வருவதாக இருந்தால் அவர் அந்த அகழியில் விழுந்து முதலைக்கு இரையாக வேண்டும். அதுபோக மேலே உள்ள கண்காணிப்பு முகாம்களின் கண்ணிலிருந்து தப்புவது கடினம்.
கோட்டையின் நுழைவுவாயிலின் உள்ளே, நீங்கள் உபர்கோட்டை ஆண்ட பல்வேறு மன்னர்களின் குறியீடுகளை காணலாம். மேலும் இங்கு கணேஷ், ஹனுமான் மற்றும் அன்னை சக்திக்கான கோயில்கள் உள்ளன.