கபினி வனப்பகுதிக்குள் காணப்படும் பலவகையான காட்டுயிர்களை நேரில் பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் ஜங்கிள் சபாரி எனப்படும் காட்டுப்பயணத்தை மேற்கொள்ளலாம்.
கபினியின் வனப்பிரதேசம் முழுவதும் பலவகையான தாவரங்களும் மரவகைகளும் செழிப்புடன் நிரம்பி காணப்படுகின்றன. இவற்றை நேரில் கண்டு ரசிக்க வசதியாக இந்த துணிகரமான ஜீப் சவாரியை தேர்ந்தெடுக்கலாம்.
இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் சுற்றுலா நிறுவனங்கள் மறக்க முடியாத இயற்கை நடைப்பயணங்களுக்கும் வசதி செய்து தருகின்றன. வருடம் முழுவதுமே மிதவெப்பத்துடன் காணப்படும் இந்த கபினி வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எப்போது வேண்டுமானாலும் ஜங்கில் சபாரி பயணம் செல்லலாம்.