ப்ஹொரம்டியோ கோயில் மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. மனதை மயக்கும் சுற்றுச் சூழலுக்கு மத்தியில் அற்புதமன சிற்பங்களுடன இந்தக் கோவில் விளங்குகின்றது. இது நாகர் பாணியில் உருவாக்கப்பட்ட கோவிலாகும். இது ஒரு பிரபலமான சிவன் கோவிலாகும்.
கோவிலில் உள்ள அழகிய மற்றும் கலை நயம் மிக்க சிவலிங்கம் மாநில முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஈர்க்கின்றது. இந்தக் கோவில் ஃபானைநக்வன்ஸ்ஹ் கோபால் தேவ் கிங் என்பவரால் கஜுராஹோ கோவில் போன்ற அமைப்புடன் கி.பி. 1089 ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும் . எனவே இது சட்டீஸ்கர் கஜுராஹோ என அழைக்கப்படுகின்றது.
அதன் அழகிய கண்கவர் பின்னணி காட்சிகளைத் தவிர்த்து இந்தக் கோவிலுடைய கட்டிடக்கலை ஆச்சரியமாக இருக்கிறது . கோவிலின் இரண்டு பாகங்களும் இஸ்ஹ்டிகா மற்றும் கல் செதுக்கப்பட்டுள்ளன.
ஒரு அமைதியான மற்றும் அழகிய ஏரி ஒன்று கோவிலின் முன் அமைந்துள்ளது . இது ஐந்து அடி உயரமுள்ளது. மேலும் இந்தக் கோவில் மண்டபம், அன்ட்ரால் மற்றும் கர்ப கிரஹம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கபப்ட்டுள்லது.
இந்தக் கோவிலை மேற்கு பகுதி தவிர அனைத்து திசைகளில் இருந்தும் அடையலம். இங்குள்ள கர்ப கிரஹத்தில் சிவலிங்கம் உள்ளது. இந்தக் கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் விஷ்ணு , சிவன் மற்றும் விநாயகர் சிற்பங்கள் உள்ளது. சிங்கங்களின் சிலைகள் மற்றும் கோவில் யானை சிலைகள் இந்தக் கோவிலுக்கு ஒரு ராஜ கம்பீரத்தை அளிக்கின்றது.
உமா மகேஷ்வர் , நட்ராஜ் , நரசிம்ஹா , கிருஷ்ணா , நிருத்யா கணேஷ் , முருகன் , சாமுண்டி, சப்த மாதா, லக்ஷ்மி நாராயண் மற்றும் வேறு சில கடவுளர்களின் சிலைகளும் இந்தக் கோவிலில் காணப்படுகின்றன . ராம் கதாவின் தடயங்கள் இந்தக் கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பல்வேறு கவர்ச்சிகரமான காமசூத்திரா சிற்பங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது . அவைகள் அந்த காலத்திய மக்களின் சமூக வாழ்க்கை பிரதிபலிக்கின்றன. கோவில் சுவரில் உள்ள மஞ்சள் தடயங்கள் கோவிலில் நடைபெறும் பல்வேறு புனித சடங்குகளை பிரதிபலிக்கின்றன.