லக்ஹி நாராயண் பாரி வட திரிபுரா மாவட்டத்தின் தலைநகரான கைலாஸ்ஹஹரில் அமைந்துள்ளது. லக்ஹி நாராயண் பாரி அதன் வளாகத்தில் நிறுவப்பட்ட கிருஷ்ண விக்ரஹத்திற்காக மிகவும் பிரபலமானது.
இந்த பிரபல விக்ரஹம் கிருஷ்ணானந்த ஸேவாயெத் மூலம் நிறுவப்பட்டது. இன்று லக்ஹி நாராயண் பாரி இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த தனித்தன்மையுடைய பழங்கால நினைவுச்சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
லக்ஹி நாராயண் பாரி கைலாஸ்ஹஹரின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். ஆனால் கைலாஸ்ஹஹர் திரிபுராவின் மிகவும் அறியப்பட்ட சுற்றுலா தலமாக இல்லை.
அவ்வாறு இருந்த போதிலும் சிவபெருமானின் உறைவிடத்தில் நீங்கள் காலடி எடுத்து வைத்த உடன் அதன் அழகிய இயற்கை சூழல் மற்றும் அமைதியான சூழ்நிலை உங்களை உங்களுடுடைய நண்பர்களுக்கு கைலாஸ்ஹஹர் சுற்றுலாவை அறிமுகப்படுத்த தூண்டும்.
அகர்தலா கைலாஸ்ஹஹரில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அகர்தலாவை அடைய நல்ல சாலைத் தொடர்புகள் அமையப்பெற்றுள்ளன. அதைப் பயன்படுத்தி அகர்தலாவில் இருந்து கைலாஸ்ஹஹரை அடைய 3 மணி நேரம் எடுக்கும். நீங்கள் கைலாஸ்ஹஹரை அடையும் போது நேரடியாக லக்ஹி நாராயண் பாரி கோவிலுக்கு செல்ல முடியும்.