பபுவாவிற்கு அருகில் அமைந்திருக்கும் கைமூர் வனவிலங்கு சரணாலயம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய சரணாலயமாகும். 1342 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் சில அருவிகளும், ஏரிகளும் உள்ளன.
புலிகள், சிறுத்தை புலிகள், காட்டு பன்றிகள், சாம்பார் மான்கள், சீத்தல் மான்கள், நான்கு கொம்புடைய ஆண்டிலோப் மான்கள் மற்றும் நில்கைஸ் போன்ற மிருகங்களை இங்கே சுற்றுலாப் பயணிகள் காண நேரிடலாம். மேலும் இங்கே 70 வகையான பறவையினங்கள் வாழ்கின்றன.
குளிர் காலத்தில் இடம் பெயர்கின்ற பறவைகள் இங்கே வருவதால் அதிக பறவைகளை இக்காலத்தில் இங்கே காணலாம். மத்திய ஆசிய வட்டாரத்தில் இருந்து பல பறவைகள் இங்கு இடம் பெயரும்.
அனுபம் ஏரி மற்றும் காளிடாஹ்வில் பல வகை மீன்களை காணலாம். இந்த சரணாலயத்திற்கு பபுவாவில் இருந்து சாலை வழியாகவும் மோஹனியா இரயில் நிலையத்திலிருந்தும் வரலாம்.